ஷரியத்துக்கு பதிலாக வாரிசுரிமை சட்டம்: உச்ச நீதிமன்றம் ஆராய ஒப்புதல்

ஷரியத்துக்கு பதிலாக வாரிசுரிமை சட்டம்: உச்ச நீதிமன்றம் ஆராய ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: மூதாதையர் சொத்துகளை கையாளுவதில் முஸ்லிம்களை ஷரியத் சட்டத்துக்கு பதிலாக மதச்சார்பற்ற இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினையை ஆராய உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக் கொண்டது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கே.கே.நவ்ஷாத் தாக்கல் செய்த மனுவில், “இஸ்லாம் மதத்தை விட்டு நான் விலகாமலேயே எனது மூதாதையர் சொத்துகளை ஷரியத் சட்டத்துக்கு பதிலாக மதச்சார்பற்ற இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ஆலப்புழையை சேர்ந்த பி.எம்.சஃபியா உள்ளிட்டோரும் இதேபோன்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரிக்க ஒப்புக்கொண்டது. இம்மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in