பொது சிவில் சட்டம் வரைவு தயாரிக்க 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
Updated on
1 min read

பொது சிவில் சட்டம் வரைவு தயாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.

பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெயர் உத்தராகண்ட் மாநிலத்துக்கு கிடைத்தது. இதற்காக பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி, அதில் பொது சிவில் அமல்படுத்தப்பட்ட அறிவிப்பை உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டார். இதன் மூலம் திருமணம், சொத்துரிமை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, விவாகரத்து உட்பட பல விஷயங்களுக்கு அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் ஒரே விதமான சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

உத்தராகண்ட் மாநிலத்துக்கு அடுத்ததாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் குஜராத் அரசு இறங்கியுள்ளது. பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் குழு ஒன்றை குஜராத் அரசு அமைத்துள்ளது. இந்த குழு 45 நாட்களுக்குள் பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரித்து தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் குஜராத் அரசு இறுதி முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in