மகாராஷ்டிராவில் நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

மகாராஷ்டிராவில் நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்
Updated on
1 min read

நடைபயிற்சிக்கு தனியாக சென்றதால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கொடுத்தவர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நடைபயிற்சிக்கு தனியாக சென்றார். இதனால் அந்தப் பெண்ணின் 31-வயது கணவர் கோபம் அடைந்தார். இத்தகவலை மாமனாரிடம் போனில் தெரிவித்த கணவர் , முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணின் கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம், மிரட்டல் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in