ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை நூர்கோட் என்ற இந்திய எல்லையோர கிராமத்துக்குள் நுழைந்த முஹ்த் சாதிக் (18) என்ற நபரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ஊடுருவ முயன்ற அந்த நபர் சந்தேகத்துக்கிடமான எந்தப் பொருளையும் எடுத்துவரவில்லை என்றும் அவர் இந்திய எல்லைக்கு வந்த நோக்கம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் தவறுதலாக அந்நபர் இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாக தெரியவந்துள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in