தெலங்கானா என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் எட்டூர்நகரம் என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ளது எட்டூர்நகரம். இங்கு பழங்குடியினர் இருவரை மாவோயிஸ்ட்டுகள் பிடித்துச் சென்றனர். அவர்களை போலீஸாருக்கு தகவல் அளிப்பவர்கள் என குற்றம்சாட்டி மாவோயிஸ்ட்டுகள் தூக்கிலிட்டு கொன்றனர்.

இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா க்ரேஹவுண்ட்ஸ் கமாண்டோக்கள் விரைந்து சென்று தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்களுக்கும், கமாண்டோக்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் குர்சம் மாங்கு என்ற பத்ரு என்பவர் தெலங்கானா மாவோயிஸ்ட் கமிட்டி செயலாளர். மல்லையா என்பவர் டிவிஷனல் கமிட்டி உறுப்பினர். முசாக்கி தேவல் மற்றும் ஜமுனா ஆகியோர் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள். ஜெய்சிங், கிஷோர் மற்றும் காமேஷ் ஆகியோர் மாவோயிஸ்ட் உறுப்பினர்கள். என்கவுன்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை கமாண்டோக்கள் மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in