துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பிய திரிணமூல் கவுன்சிலர்

சுசாந்தா கோஷ்
சுசாந்தா கோஷ்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கொல்கத்தா மாநகராட்சியின் 108-வது வார்டுகவுன் சிலராக சுசாந்தா கோஷ் பதவி வகிக்கிறார்.

இவர் நேற்றுமுன்தினம் வீட்டுமுன் இருந்தபோது ஸ்கூட் டரில் வந்த 2 பேரில் ஒருவர் சுசாந்தா கோஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குண்டு வெளியேறவில்லை. துப்பாக்கி பழுதாகியிருந்ததை உணர்ந்த நபர் தான் வந்த ஸ்கூட்டரில் ஏறி தப்ப முயன்றார். அவரை, சுசாந்தா கோஷ் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஸ்கூட்டரில் இருந்த நபர் தப்பிவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in