ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த சில நாட்களாக இந்திய விமான நிறுவனங்களுக்கு சமூக வலைதளம் மூலம் சில மர்ம நபர்கள் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 50 விமானங்களுக்கு மிரட்டல் வந்தது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 350 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

நேற்று இண்டிகோவின் 18 விமானங்களுக்கும். விஸ்தாராவின் 17 விமானங்களுக்கும், ஆகாஸா ஏர் நிறுவனத்தின் 15 விமானங்களுக்கும் மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மிரட்டல் பதிவுகள் வெளிவருவதை தடுக்க வேண்டும் என்று எக்ஸ் மெட்டா உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in