மே.வங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

மே.வங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம், லோக்பூர் காவல் எல் லைக்குட்பட்ட பதூலியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரி எடுப்பதற்காக வெடிபொருள் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெடிபொருட்களை கையாளும் போது எதிர்பாராத வகையில் வெடிவிபத்து ஏற்பட் டது. இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

வெடிவிபத்தில் இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சமும் காயம் அடைந்த வர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள் ளது. வெடி விபத்துக்கான கார ணத்தை கண்டறிய விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாக எரிசக்தி மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in