இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பான பெண் தொழிலாளர்கள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என மத்திய தொழிலாளர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:

இந்தியாவின் தொழிலாளர் சக்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் மாற்றம் அடைந்துள்ளது. பெண்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைகளை உடைத்து, அதிக பொறுப்புகளை ஏற்று முன்னிலை வகிக்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. சில துறைகளில் அவர்கள் ஆண்களை விட அதிக நேரம் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றம் இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் ஏற்பட்டுள்ள மவுனப் புரட்சி ஆகும்.

பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்கில் இந்தியா ஆகியவை பெயரளவு கொள்கைகள் அல்ல, அவை அடிப்படை கொள்கை மாற்றமாகும். இவற்றின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் உந்து சக்தியாக திகழ்வதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in