

ராஜஸ்தானில் நேற்றிரவு வீசிய புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர். பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "ராஜஸ்தானில் அல்வார், தோல்பூர், பாரத்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புழுதி புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறும்போது, "புழுதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட் இறந்தவர்களுக்கு இரங்கல் வெளியிட்டத்துடன் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
ராஜஸ்தான் மட்டுமில்லாது பஞ்சாம் , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நேற்று பலத்த மழை பெய்ந்துள்ளது. கனமழை காரணமாக கோதுமை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பஞ்சாப் ஊடங்களும் செய்தி வெளியிட்டுள்ளன