பெண்கள் ஜீன்ஸ், செல்போன் உபயோகிக்கத் தடை: உ.பி பஞ்சாயத்து உத்தரவு

பெண்கள் ஜீன்ஸ், செல்போன் உபயோகிக்கத் தடை: உ.பி பஞ்சாயத்து உத்தரவு
Updated on
1 min read

உத்திரப் பிரதேசத்தில் குஜ்ஜார் சமூக பஞ்சாயத்தில், பெண்கள் ஜீண்ஸ் அணியவும் செல்போன் பயன்ப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஜீன்ஸ் அணிவதாலும், செல்போன் உபயோகப்படுத்துவதாலும், சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக அந்த பஞ்சாயத்தில் கூறப்பட்டது. இதனாலே அவர்கள் ஈ- டீஸிங்கிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டது.

உத்திரப் பிரதேசத்தில் குஜ்ஜார் சமூக பஞ்சாயத்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்பட்டுத்தவும், ஜீண்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் ஆட்சேபணைக்குரிய விதத்தில் ஆடைகளை உடுத்துவதாலேயே, அவர்களுக்கு ஈவ்-டீசிங் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாக பஞ்சாயத்தில் கூறப்பட்டது.

இதனை அடுத்து பேசிய ஊர்த் தலைவர் அசோக் குமார், "குஜ்ஜார் சமூக மக்கள், தங்கள் குடும்ப திருமணங்களின் டி.ஜே நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அவை நமது கலாச்சாரம் அல்ல" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in