மணிப்பூர் விவகாரத்தில் கவலையற்ற மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மணிப்பூர் விவகாரத்தில் கவலையற்ற மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
Updated on
1 min read

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் மனிதநேயம் அழிந்தது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்தன. துளியும் வருத்தமில்லாத பிரதமர் மோடி மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை.

அவரது ஆணவம் ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது பாஜக எப்படி தங்கள் வாழ்க்கையை துயரமாக மாற்றியது என்பதை மணிப்பூரின் அனைத்து சமூக மக்களும் அறிவார்கள்.

மணிப்பூரில் அவர்கள் அழித்த எண்ணற்ற உயிர்களுக்காக பிரதமர் மோடியும் அவரது அரசும் சிறிதும் பரிவு காட்டவில்லை என்பதை இந்திய மக்கள் இப்போது உணர்வார்கள்.

மணிப்பூரில் கொடூரமான வன்முறைகள் அரங்கேறின. ஆனால் பிரதமர் அமைதியாக இருந்தார். துயர சம்பவங்களுக்கு பிறகுதான் ஆகஸ்ட் 2023-ல் உதட்டளவில் கவலை தெரிவித்தார். அது இப்போது எதிரொலிக்கிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in