2019-ல் வென்றதுபோல் இம்முறை பாஜகவால் முடியாது: சசி தரூர் கணிப்பு

2019-ல் வென்றதுபோல் இம்முறை பாஜகவால் முடியாது: சசி தரூர் கணிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் நேற்று தனியார் பத்திரிகை நடத்திய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் பேசியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பல மாநிலங்களில் பாஜக மிகவும் உச்சத்தில் இருந்தது. இதனால் அதிக இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றது.

அதே போன்று இம்முறைஅக்கட்சியால் அதிக இடங்களைவெல்ல முடியாது. இந்த முறைஅந்தக் கட்சி சரிவை நோக்கிச் செல்வதை நம்மால் காண முடியும்என்று நம்புகிறேன். அவர்களுக்கு எவ்வளவு தூரம் சரிவு ஏற்படும் என்பது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தைப் பொறுத்தே அமையும். தற்போது எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு சசிதரூர் பேசினார்.

2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திபேசும் மாநிலங்களில் அந்தக் கட்சி2019-ல் அதிக வெற்றியை பெற்றது. ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அந்தக் கட்சிகணிசமான சீட்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in