சத்தீஸ்கர் சட்டப்பேரவையை பார்வையிட்ட 120 முன்னாள் மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கர் சட்டப்பேரவையை பார்வையிட்ட 120 முன்னாள் மாவோயிஸ்ட்கள்
Updated on
1 min read

ராய்ப்பூர்: மார்ச் 31-ம் தேதிக்​குள் நாடு முழு​வதும் மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை ஒழிக்க மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

இதன்​படி, மாவோ​யிஸ்ட் அமைப்​பு​களில் இருந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்​புவோருக்கு மறு​வாழ்வு திட்​டங்​களை அந்​தந்த மாநில அரசுகள் அறி​வித்​துள்​ளன. இதையடுத்​து, இது​வரை நூற்​றுக்​கணக்​கானவர்​கள் சரணடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் அரசின் மறு​வாழ்வு முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாக, சுமார் 120 சரணடைந்த மாவோ​யிஸ்ட்​கள் ராய்ப்​பூரில் புதி​தாகக் கட்​டப்​பட்​டுள்ள சட்​டப்​பேர​வையைப் பார்​வை​யிட வெள்​ளிக்​கிழமை ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

இவர்​களில் 59 வயதான முன்​னாள் மத்​திய குழு உறுப்​பினர் தக்​கலப்​பள்ளி வாசுதேவ ராவும் (ஆஷண்ணா (எ) ரூபேஷ்) ஒரு​வர். இவர் மாவோ​யிஸ்ட்​களின் ‘குண்டு தயாரிப்​பாளர்’ என்று அறியப்​பட்​ட​வர். மேலும், 2003-ம் ஆண்டு ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மீதான கொலை முயற்சி உள்​ளிட்ட முக்​கி​யத் தாக்​குதல்​களில் இவருக்​குத் தொடர்பு இருப்​ப​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

சரணடைந்​தவர்​களை ‘ஜெய் ஜோஹர்’ என பாரம்​பரிய முறைப்​படி முதல்​வர்​ விஷ்ணு தி​யோ சாய்​ வரவேற்​றார்​.

சத்தீஸ்கர் சட்டப்பேரவையை பார்வையிட்ட 120 முன்னாள் மாவோயிஸ்ட்கள்
ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in