அந்தமான் நிகோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை (புதன்கிழமை) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 4.1 ரிக்டராகப் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்தமான் நிகோபார் தீவில் புதன்கிழமை காலை 7.53 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்த வார தொடக்கத்தில், இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. சமீபகாலமாக உலகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த புத்தாண்டு நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in