

ஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால் ரூ.2 லட்சத்தில் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி ஆகியவை உட்பட ராஜஸ்தானில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள்தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பாஜக.வின்தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இது போல் பல வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.