ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
Updated on
2 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை பெய்த கனமழை​யால் திடீர் வெள்​ள​மும் நிலச்சரி​வும் ஏற்​பட்​டன. இதில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தனர், மேலும் பலர் மாய​மாகி​யுள்​ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதையடுத்து நேற்று அதி​காலை​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் நிலச்சரிவும் ஏற்​பட்​டது. வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன.

ரஜோரி நகரின் தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​த​தால், அப்பகு​தி​யில் வசித்த பொது​மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​திருப்​ப​தாக அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்பட்​டனர். அவர்​களை தேடும் பணி​யில் மீட்​புக் குழு ஈடுபட்​டுள்​ளது.

கனமழை காரண​மாக, ரியாசி மாவட்​டத்​தில் உள்ள சலால் அணை​யின் அனைத்து மதகு​களை​யும் திறக்க அதி​காரி​கள் உத்தர​விட்​டனர். இதனால் செனாப் நதி​யின் நீர்​மட்​டம் கணிச​மாக உயர்ந்​துள்​ளது. நிலைமை சீராகும் வரை நதிக்​கரை​யில் வசிக்​கும் மக்​கள் அதன் அரு​கில் செல்ல வேண்​டாம் என்​றும், மீன்​பிடித்​தல், குளித்​தல், கால்​நடைகளை மேய்த்​தல் அல்​லது நதி​யைக் கடக்க முயற்​சிப்​ப​தைத் தவிர்க்​கு​மாறும் அதி​காரி​கள் அறிவுறுத்தியுள்ளனர்.

துணை நிலை ஆளுநர் ஆய்வு:

கனமழை மற்​றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்​கப்​பட்ட பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்டங்களின் நிலைமை குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆய்வு செய்​தார். முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் கூறும்போது, ”மக்​களின் உயிரைப் பாது​காப்​பதே நிர்​வாகத்​தின் முதன்​மை​யான முன்​னுரிமை. வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு சாத்​தி​ய​மான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும்” என்று பதி​விட்​டுள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்​றும் முதல்​வர் உமர் அப்​துல்லா ஆகியோருடன் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்​டறிந்​தார். பாதிக்​கப்​பட்ட மக்​களின் பாதுகாப்பு மற்​றும் பாது​காப்​புக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் மத்​திய அரசு செய்​யும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையில், ஞாயிற்​றுக்​ கிழமை பகல்​ காம் மற்​றும் பல்​தால் ஆகிய இரு வழிகளி​லும் அமர்​நாத் யாத்​திரையை நிர்​வாகம் நிறுத்​தி​யது.

நாகாலாந்தில் 8 பேர் உயி​ரிழப்பு: வடகிழக்கு மாநில​மான நாகாலாந்​தி​லும் நேற்று கனமழை பெய்​தது. இதனால் மோன் மாவட்​டத்​தில் வெள்​ளப்​பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இது குறித்து மோன் மாவட்ட துணை ஆணை​யர் வென்யே கொன்​யாக் கூறும்​போது, ”வெள்​ளம், நிலச்​சரி​வில் சிக்​கி 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். அப்​பகு​தி​யில் தொடர்ந்து மீட்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

ரூ.4 லட்​சம் நிவாரணம்: வெள்​ளம், நிலச்​சரி​வில் சிக்கி உயிரிழந்தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்​துள்ள நாகாலாந்து முதல்​வர் நெய்​பியு ரியோ, தலா ரூ.4 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளார். காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.74 ஆயிரம் வழங்​கப்​படும் என்றும் தெரிவித்துள்​ளார்.

அனைத்​துத் துறை​களும் தீவிரக் கண்​காணிப்​பில் இருக்​கு​மாறு முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், நதிக்​கரைகள் மற்​றும் நிலச்​சரிவு ஏற்​படக்​கூடிய பகு​தி​களுக்​குச்​ செல்​வதைத்​ மக்கள் தவிர்க்​கு​மாறு​ கேட்​டுக்​கொண்​டுள்​ளார்​.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
ஜி.வி.பிரகாஷுக்கு 3-வது தேசிய விருது: ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in