ரயில் நிலையத்தின் இரும்பு தூணில் சிக்கிய சிறுமி மீட்பு

ரயில் நிலையத்தின் இரும்பு தூணில் சிக்கிய சிறுமி மீட்பு
Updated on
1 min read

திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜம்பேட் டையை சேர்ந்த சாய் குமார், தனது மனைவி மற்றும் 2 வயது மகள் சாய் யஷஸ்வியுடன் ரயிலில் சித்தூருக்கு புறப்பட்டார். ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயிலில் மாற காத்திருந்தனர்.

அந்த சமயத்தில் சிறுமி சாய் யஷஸ்வி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென அங்குள்ள ஒரு இரும்பு தூணில் சிறுமியின் தலை சிக்கிக்கொண்டது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ரயில்வே ஊழியர்கள் வந்து இரும்பு தூணின் ஒரு பக்கத் தில் வெட்டி சிறுமியை மீட்டெடுத்தனர். ரயில்வே ஊழியர்களுக்கு சிறுமியின் பெற்றோர் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in