மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வெளியேற தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவு

தவறினால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வெளியேற தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவு
Updated on
1 min read

வருசநாடு: மேகமலை வன விவ​சா​யிகள் குடும்​பத்​தைச் சேர்ந்த அரசு ஊழியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதி​காரி​களுக்​கு, தேனி மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேனி மாவட்​டம், ஆண்​டிபட்டி வட்​டம் கடமலை - மயிலை ஒன்​றி​யத்​தில் உள்ள வருச​நாடு, மேகமலை, தும்​மக்​குண்​டு, சிங்​க​ராஜபுரம், நரியூத்​து, முத்​தாலம்​பாறை, பொன்​னம்​படு​கை, தங்​கம்​மாள்​புரம், முருக்​கோடை ஆகிய 9 ஊராட்​சிகளுக்​குட்​பட்ட 98 மலைக் கிராமங்​களில் ஆயிரக்​கணக்​கான மக்​கள் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு பிப்.9-ம் தேதி இப்​பகுதி புலிகள் காப்​பக​மாக அறிவிக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்​து, இங்கு வசிக்​கும் 4,601 பேரை வெளி​யேற்ற வனத்​துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக, இவர்​களை துணை ராணுவம் மூலம் அகற்ற உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பல்​வேறு அமைப்​பு​களும், கட்​சிகளும் தொடர்ந்து போராடி வரு​கின்​றன. தமிழக அரசும் மறுசீ​ராய்வு மனு செய்​யப்​படும் என்​று, இப்​பகுதி மக்​களுக்கு வாக்​குறுதி அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், வன விவ​சா​யிகளின் குடும்​பத்​தில் உள்ள 118 அரசு ஊழியர்​கள் அந்த நிலத்தை விட்டு வெளி​யேற வேண்​டும்.

இல்​லை​யெனில், துறைரீதி​யாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்த விவரம்: வன விவ​சா​யிகள் குடும்​பத்​தைச் சேர்ந்த உறுப்​பினர்​கள் 118 பேர் ராணுவம், காவல் துறை, வேளாண்​மை, கிராம நிர்​வாக அலு​வலர், சுகா​தா​ரம், தபால் துறை, நியாய விலைக் கடை, விடுதி காப்​பாளர், மின்​வாரி​யம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இவர்​களின் குடும்​பம் வனத்தை விட்டு வெளி​யேறா​விட்​டால், இந்த 118 அலு​வலர்​கள் மீதும் துறைரீ​தி​யான ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கும்​படி, துறை தலைமை அதி​காரி​களுக்கு தேனி மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும் ஊதி​யம், கவுரவ ஊதி​யம் பெறும் சத்​துணவு ஊழியர்​கள் எவரேனும் அப்​பகு​தி​யில் இருந்​தால், அவர்​கள் அங்​கிருந்து வெளி​யேற மாவட்ட சத்​துணவுத் துறை அதி​காரி​கள் அறி​வித்​துள்​ளனர். பொது​மக்​களும், பல்​வேறு கட்​சி​யினரும் தொடர்ந்து போராடி வரும் நிலை​யில், அடுத்​தடுத்த நடவடிக்​கை​ அப்பகுதி மக்​களிடையே அதிர்ச்சியை ஏற்​படுத்தியுள்​ளது.

மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வெளியேற தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவு
வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in