அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: இங்​கிலாந்தைச் சேர்ந்த ‘கிறிஸ்​டியன் எய்​டு’ என்ற தன்​னார்வ அமைப்​பு, பருவ நிலை மாற்​றத்​தால் உலக நாடு​களுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்​பு​களை ஆய்வு செய்துள்​ளது.

இதன்​படி 2025-ல் அனல் காற்​று, காட்​டுத் தீ, வறட்சி மற்​றும் புயல்​களால் உலக நாடு​களுக்கு 122 பில்​லியன் டாலருக்கு மேல் (சுமார் ரூ.11 லட்சம் கோடி) இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த நெருக்​கடிக்கு புதைபடிவ எரிபொருள் நிறு​வனங்​கள் முக்​கியப் பங்கு வகிப்​பதை அறிக்கை சுட்​டிக்​காட்​டு​கிறது.

பசுமை இல்ல வாயு வெளி​யேற்​றத்தை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்​கப்ப​டாத​தால் ஒரு நெருக்​கடி​யின் பாதிப்பை சமூகங்​கள் தொடர்ந்து எதிர்​கொண்டு வரு​கின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2025-ல் மிகப்​பெரிய நிதி இழப்பை ஏற்​படுத்​திய பேரிடர்​களை இந்த அறிக்கை பட்​டியலிட்​டுள்​ளது. இதன்​படி அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் ஏற்​பட்ட காட்​டுத் தீ, 60 பில்​லியன் டாலர் சேதத்​துடன் முதலிடத்​தில் உள்​ளது. 400-க்​கும் மேற்​பட்​டோரின் உயி​ரிழப்​புக்​கும் இது வழி​வகுத்​தது.

மிக அதிக இழப்பு ஏற்​படுத்​திய முதல் 4 பேரழி​வு​களில் 4 ஆசி​யா​வில் நிகழ்ந்​தன. இந்​தி​யா, பாகிஸ்​தானில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்கு சு​மார் ரூ.54,000 கோடி வரை இழப்பை ஏற்​படுத்​தி​யது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
மும்பை மாநகராட்சி தேர்தலில் அஜித் பவார் தனித்து போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in