

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் சிவராஜ் சிங் பேசியதாவது:
டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் அறுவடையின் போது எஞ்சிய வைக்கோல்களை எரித்து வந்தனர். இதனால் டெல்லியில் பெரும் காற்று மாசு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பயிர்க்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகள் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்க்கழிவுகளை எளிய முறையில் திடக்கழிவாக மாற்றினர். இதனால் பயிர்க்கழிவுகள் எரிப்பது குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.