கடல் அரிப்பால் 6 அடி ஆழத்துக்கு பள்ளம்: திருச்செந்தூரில் புனித நீராடுவதில் பக்தர்கள் சிரமம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated on
1 min read

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்​கரை​யில் கடல் அரிப்பு காரண​மாக 6 அடி ஆழத்​துக்கு பள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்தர்கள் வரு​கின்​றனர். இங்கு வரும் பக்தர்கள் கடல் தீர்த்த கட்​டத்​தி​லும், நாழி கிணற்​றி​லும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்​கின்​றனர்.

அரு​கே​யுள்ள அமலிநகர் கடற்​கரை​யில் தூண்​டில் வளைவு பாலம் அமைக்​கப்​பட்ட பின்​னர், திருச்​செந்​தூர் கோயில் பகுதி கடல் அரிப்​பால் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது. இதனால் கடற்​கரைப் பகுதி பாதி​யாக சுருங்​கி​விட்​டது.

கடல் அரிப்​பைத் தடுக்க சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் நேரில் பார்​வை​யிட்​டு, இது தொடர்​பான அறிக்​கையை தமிழக அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளனர்.

அதே​போல, மத்​திய கடல் ஆராய்ச்சி மையத்​தினரும் ஆய்வு செய்​து, தங்​களது அறிக்​கையை தமிழக அரசிடம் சமர்​பித்​துள்​ளனர். கடல் அரிப்​பைப் தடுக்க ரூ.30 கோடி​யில் திட்​டம் தயாரிக்​கப்​பட்​டு, அரசின் பரிசீலனை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த சில வாரங்​களுக்கு முன்பு தென்​தமிழக கடலோரப் பகு​தி​களில் கனமழை பெய்​தது. தொடர்ந்து கடல் அரிப்பு அதி​கரித்து வந்​தது. தற்​போது, திருச்​செந்​தூர் கோயில் கடல் முகப்​பில் பக்தர்கள் புனித நீராடக் கூடிய இடத்​தில் சுமார் 200 மீட்​டர் நீளத்​துக்​கு, 3 அடி முதல் 6 அடி வரை பள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது.

இதனால் பக்தர்கள் புனித நீராட முடி​யாமல் சிரமப்​பட்டு வரு​கின்​றனர். இதுகுறித்து அரு​கில் உள்ள மீனவ கிராம மக்​கள் கூறும்​போது, ‘வழக்​க​மாக கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் கடலில் காற்​றின் திசை​யில் மாற்​றம் ஏற்​படும்.

அப்​போது கடல் அலை​யின் வேகத்​தில் மாற்​றம் காரண​மாக கடலோரப் பகு​தி​களில் அரிப்பு ஏற்​பட்டு பள்​ளம் ஏற்​படும். அதே நிலைப்​பாடு காரண​மாகத்​தான் கோயில் பகு​தி​யில் கடல் அரிப்பு அதி​கரித்​து, 6 அடி ஆழத்​துக்கு பள்​ளம் விழுந்​துள்​ளது.

நாட்​கள் செல்​லச் செல்ல இது சாதாரண நிலைக்கு மாறி​விடும்’ என்​றனர். தமிழகத்​தின் முக்​கிய ஆன்​மிகத் தலமான திருச்​செந்​தூர் கோயில் முகப்​பில் கடல் அரிப்பு ஏற்​படு​வதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்​து உள்​ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.</p></div>
ராஜபாளையத்தில் ராஜுக்கள் சமூகம் சார்பில் பாரம்பரிய கொத்தலு திருவிழா கொண்டாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in