3 புலிக்குட்டிகள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மசினகுடி: நீல​கிரி மாவட்​டம் முது​மலை அருகே மசினகுடி வனச்​சரகத்​துக்கு உட்​பட்ட மாயாறு அணைப்பகு​தி​யில் வன ஊழியர்​கள் நேற்று கண்​காணிப்பில் ஈடு​பட்​ட போது மாயார் அணை நீர் பாசனகால்​வாய் தடுப்பு கம்​பிகளுக்கு இடையே புலிக்​குட்டி ஒன்று இறந்து கிடந்​தது தெரிய​வந்​தது.

வனச்​சரகர் ராஜன், முது​மலைவன கால்​நடை மருத்​து​வர் ராஜேஷ் மற்​றும் வன ஊழியர்​கள் அங்கு சென்று புலிக்​குட்​டி​யின் உடலை மீட்​டனர். வனத்​துறை​யினர் கூறும்​போது, “இறந்த பெண்புலிக்​குட்​டிக்கு ஒரு வயது இருக்​கும். மாயாறு அணை​யில் சிக்கி அடித்து வரப்​பட்டு நீர் பாசன கால்​வா​யில் இறந்து கிடந்​தது. உடல் மீட்​கப்​பட்​டு, பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டது. நீரில் மூழ்​கிய​தால், அதி​கள​வில் தண்​ணீர் குடித்து புலிக்​குட்டி உயி​ரிழந்​துள்​ளது” என்​றனர்.

கூடலூர் வனக்​கோட்​டம், பந்​தலூர் வன சரகத்​தி​லுள்ள தேவாலா - பந்​தலூர் சாலை​யில் ரிச்​மண்ட்பகு​தி​யில் அதி​காலை​யில் தாயுடன் சாலையை கடக்​கும்​போது இரண்டு சிறுத்​தைக் குட்​டிகள் வாக​னம் மோதி​ய​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தன. தகவலறிந்து வந்த பந்​தலூர் வனச் சரக அலு​வலர் சஞ்​சீவி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்​தார்.

கால்​நடை மருத்​து​வர் ராஜேஷ்கு​மார் உடற்​கூ​ராய்வு செய்த பின்​னர் சிறுத்​தைக் குட்​டிகளின் உடலை எரியூட்​டினர்.சிறுத்​தை குட்​டிகள் மீது மோதிய வாக​னத்தை கண்​டு​பிடிக்க அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி பதிவு​களை வனத்​துறை​யினர் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in