சத்தியமங்கலம் வனப் பகுதியில் நோய் காரணமாக யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை.
Updated on
1 min read

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்தது.

சத்தியமங்கலம் வனச்சரகத் துக்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பாறைகளுக்கு இடையே விழுந்து இறந்த நிலையில் இருந்ததைக் கண்டறிந்தனர்.

வனத்துறை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானையின் உடலை கூராய்வு செய்தனர். இதில், குடல் புழு நோயால் ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது.பின்னர் இறந்த யானையை அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்று விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in