குன்னூர் மலைப்பாதையில் யானைகளை கண்காணிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக குட்டியுடன், 10 யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திர நாத் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைத்து, வனப் பகுதி வழியாக சமவெளிப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காட்டு யானைகள் சாலைகளில் நடமாடினால், அவற்றை துன்புறுத்தவோ, புகைப் படம் எடுக்கவோ முயல வேண்டாம் என வனத்துறையினர் வந்தால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in