நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள்: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள்: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப்​ பள்​ளி​களில் நூல​கப் பாட​வேளை​களில் வாசிப்பு இயக்க செயல்​பாடு​களை நடப்பு கல்​வி​யாண்​டிலும் அமல்​படுத்த வேண்​டுமென தொடக்​கக் கல்​வித்​துறை உத்தரவிட்டுள்​ளது.

இதுகுறித்து தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்:

பள்​ளிக் குழந்​தைகளிடம் உரை​யாடலை தொடங்​க​வும், இயல்​பாக உரை​யாட​வும் வாசிப்​பு​தான் வாசலாக அமை​யும். வாசிப்​பின் வாயி​லாக சமூக சிந்​தனையை தூண்​ட​வும், உளப்​பாடு​களை வெளிக்​கொண்டு வரவும் மாபெரும் வாசிப்பு இயக்​கம் செயல்படுத்​தப்​பட்டு வரு​கிறது.

261 புத்தகங்கள்

இதன் அடிப்​படை​யில் வாசிப்பு இயக்​கத்​துக்​கான கதைப் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற என்ற வகை​யில் முதல்​கட்​ட​மாக 53 புத்​தகங்​கள், 2-ம் கட்​ட​மாக 70, 3-ம் கட்​ட​மாக 81 மற்​றும் 4-ம் கட்ட​மாக 57 என மொத்​தம் 261 புத்​தகங்​கள் பள்​ளி​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதையடுத்து இந்த வாசிப்பு இயக்​கப் புத்​தகங்​களை நடப்பு கல்வியாண்​டிலும் (2026-27) பள்ளி நூல​கப் பாட​வேளை​களில் மாணவர்​கள் முழு​மை​யாக வாசித்​துப் பயன்​பெறும் வகை​யிலும் மாணவர்​களை கதைச் சொல்​லிகளாக​வும், எழுத்​தாளர்​களாக​வும் உரு​வாக்​கும் வகை​யில் நடை​முறைப்​படுத்த வேண்​டும். இதுகுறித்து தங்​கள் ஆளுகைக்​குட்​பட்ட அனைத்து பள்​ளித் தலைமை ஆசிரியர்​களுக்​கும் சம்​பந்​தப்​பட்ட வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் வாயி​லாக அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அந்த அறிக்கையில் கூறப்​பட்​டு உள்​ளது.

நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள்: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் தமிழகத்தில் 15 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in