பிளஸ் 2 தேர்வு விடைத்​தாள் நகல் இன்று முதல் பதி​விறக்​கலாம்: அரசு தேர்​வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு விடைத்​தாள் நகல் இன்று முதல் பதி​விறக்​கலாம்: அரசு தேர்​வுத் துறை அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்​கள் இன்று முதல் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம் என அரசு தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அரசுத் தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தின்​கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்​தன. தேர்வு முடிவு​கள் மே 8-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்பங்​கள் பெறப்​பட்​டன. இதற்கு 67,812 பேர் விண்​ணப்​பித்​தனர்.

இந்த நிலை​யில், www.dge.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் விடைத்​தாள் நகலை மாணவர்​கள் ஜூன் 5 (இன்​று) முதல் 16-ம் தேதி வரை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இதில் ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தால் 9498383075, 9498383076 ஆகிய எண்​களில் தொடர்​பு​ கொண்டு விவரங்​களைப் பெறலாம். பாட​வாரி​யாக விடைத்​தாள் நகல் பதி​விறக்​கம் செய்​யும் நாட்​கள் விவரம் ஒரு நாளுக்கு முன்​ன​தாக வெளி​யிடப்​படும். மேற்​கண்ட இணை​யதளத்​தி​லும் விவரங்​களை அறிய​லாம்.

விடைத்​தாள் நகலை பதி​விறக்​கம் செய்த பிறகு, மறுகூட்​டல், மறும​திப்​பீட்​டுக்​கான படிவத்தை தேர்​வர்​கள் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். பூர்த்தி செய்த விண்​ணப்​பத்​தை, அந்​தந்த மாவட்​டத்​தில் உள்ள அரசுத் தேர்​வு​கள் உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் உரிய கட்​ட​ணத்தை பணமாக செலுத்தி சமர்ப்பிக்க வேண்​டும்.

புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட தென்​காசி, ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்​சி, செங்​கல்​பட்​டு, மயி​லாடு​துறை மாவட்​டங்​களைச் சேர்ந்த தேர்​வர்​கள் விண்​ணப்​பத்தை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கத்​தில் உரிய கட்​ட​ணத்​துடன் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு விடைத்​தாள் நகல் இன்று முதல் பதி​விறக்​கலாம்: அரசு தேர்​வுத் துறை அறிவிப்பு
தவெக அரசு பதவி​யேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் தலை​மை​யில் அமைச்சரவை இன்று கூடுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in