

தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஜியோ நிறுவனம் AI கிளாஸ்ரூம் என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகளை நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய AI கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
இந்தத் திட்டத்தின் மூலம் ஜியோ மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கல்வித் துறையில் அறிமுகப்படுத்துகிறது.
இதன் தொடர்ச்சியாக 'ஜியோ AI கிளாஸ்ரூம்' என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.