

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாங்காங் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.
வேலூர்: விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு, தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (க்ருங்தெப்) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.
தாய்லாந்து நாட்டின் பிரிவி கவுன்சில் ஆலோசனைக் குழு உறுப்பினரான பலகோர்ன் சுவன்ரத் மற்றும் பல்கலை. தலைவர் பிச்சை ஜன்மனி ஆகியோர், சங்கர் விசுவநாதனுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கினர்.
பொறியியல் கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பு, தலைமைத்துவம் மற்றும் உயர்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றைப் பாராட்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.