

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜெகநாத சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவர் 2016-ல் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள், அம்மாநில முதல்வர் முன்னிலையில் சரணடைந்தனர். தேடப்பட்டு வந்த ரமேஷும் அந்த கும்பலில் இருந்தார்.
பின்னர் ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக க்யூ பிரிவு போலீஸார் ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கு ரமேஷை நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தீவிரவாத மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் ரமேஷை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.