பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு​கள் வெளி​யீடு தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் வெளி​யீடு சற்று தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. இதுகுறித்​து, தேர்​வுத் துறை அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “பிளஸ்-2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

எனினும், தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும்.

இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது. புதிய அரசு அமைந்​ததும், உரிய ஒப்​புதல் பெற்று தேர்வு முடிவு​களை வெளி​யிட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகின்றன’’ என்றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: திருமாவளவன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in