ஈடுபாட்டுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்: முதலிடம் பெற்ற நாகை அரசுப் பள்ளி மாணவர் நம்பிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களில்  நீட் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் தினேஷை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.

அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் தினேஷை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: ​முழு ஈடு​பாட்​டுடன் படித்​தால் பயிற்சி வகுப்​புக்கு செல்​லாமலேயே நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்று மருத்​துவ படிப்​பில் சேர முடி​யும் என அரசுப் பள்​ளி​களில் முதலிடம் பெற்ற நாகை மாணவர் நம்​பிக்கை தெரி​வித்​துள்ளார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் அருகே உள்ள பெரிய குத்​தகை கிராமத்​தைச் சேர்ந்த முரு​கையன்- உமா​ராணி தம்​ப​தி​யரின் மகன் தினேஷ். விவ​சாய குடும்​பத்​தைச் சேர்ந்த இவர், நாகை மாவட்ட அரசு மாதிரி மேல்​நிலைப் பள்​ளி​யில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்​று, நீட் தேர்வு எழு​தி​னார். இதில் 599 மதிப்​பெண்​கள் பெற்று அரசு பள்ளி மாணவர்​களின் தரவரிசை பட்​டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்​துள்​ளார்.

அவரை நாகை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன் குமார், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கேழ்​கர் சுப்​பிரமண்ய பாலசந்​திரா உள்ளிட்ட பலரும் பாராட்​டி, வாழ்த்து தெரி​வித்​தனர். டிஆர்ஓ பவணந்தி உள்​ளிட்ட அரசு அதி​காரி​கள் உடனிருந்​தனர். இதுகுறித்து மாணவர் தினேஷ் கூறும்போது, நான் வேறு எந்த பயிற்சி வகுப்​பிலும் சேராமல் வீட்​டில் இருந்​த​படியே புத்​தகங்​கள் மற்​றும் இணை​யதளம் மூலம் படித்தேன்.

பள்ளி ஆசிரியர்​களும் எனக்கு எல்லா வித​மான உதவி​களை​யும் செய்​தனர். எனது பெற்​றோரும் உறு​துணை​யாக இருந்​தனர். முழு​மை​யான ஈடு​பாட்​டுடன் படித்​தால், எந்த பயிற்சி வகுப்​புக்​கும் செல்​லாமல் அனை​வ​ராலும் நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்று மருத்​துவ படிப்​பில் சேர முடி​யும் என்​றார்.

<div class="paragraphs"><p>அரசுப் பள்ளி மாணவர்களில்  நீட் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் தினேஷை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.</p></div>
எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in