மாநகராட்சி பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறப்பு: கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த ஆணையர் அறிவுறுத்தல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் அனைத்து பள்​ளி​களும் ஜூன் 4-ம் தேதி மீண்​டும் திறக்​கப்​பட​வுள்​ளன. சென்னை மாநகராட்சிப் பள்​ளி​களி​லும் பாது​காப்​பான, தடையற்ற மற்​றும் கற்​றலுக்கு உகந்த சூழலை உறுதி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

தமிழக அரசின் உத்​தர​வுப்​படி, சென்னை மாநக​ராட்சி பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு பாது​காப்​பான சூழலை உறுதி செய்​தல், அனைத்து மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டிகள் மற்​றும் நிலத்​தடி நீர்த்​தேக்​கத் தொட்​டிகளை சுத்​தம் செய்து பராமரித்​தல், மாணவர்​கள் பயன்​படுத்​தும் கழிப்​பறை​களை சுத்​தம் செய்​தல், நீர்க்​கசிவு​களை சரி செய்​தல், வடி​காலில் பராமரிப்​புப் பணி​களை மேற்​கொள்​ளுதல் போன்​றவற்றை உடனடி​யாக மேற்​கொண்டு முடிக்க மண்டல அலு​வலர்​களுக்கு ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

மின் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் பள்​ளி​களில் உள்ள அனைத்து மின் விசிறிகள், மின்​விளக்கு பொத்​தான்​கள், மின்​சார மணி, மின்​னாக்கி உள்​ளிட்ட மின் சாதனங்​களை முறை​யாக பராமரிக்​க​வும், தேவை இருப்​பின் புதி​தாக மாற்​ற​வும், மின் பாது​காப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வும், பள்ளி வளாகங்​களில் கொசுக்​கள், தேன் கூடு​கள் உள்​ளிட்​ட​வற்றை பாது​காப்​பாக அகற்றி பூச்​சிக் கட்​டுப்​பாட்டு நடை​முறை​களை மேற்​கொள்​ள​வும் மாநக​ராட்சி பள்​ளிக் கல்​வித்​துறை, மண்டல அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​துக்கு உணவு தயாரிக்​கும் 38 மைய சமையற்​கூடங்​களில் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல், உணவுப் பொருட்​கள் இருப்பு அறை​கள், சமைக்​கும் இடங்​கள், வடி​கால் பாதைகள் மற்​றும் குடிநீர் வசதி​கள் ஆகிய​வற்றை முற்​றி​லும் சுகா​தா​ர​மான முறை​யில் பராமரித்து தயார்​நிலை​யில் வைக்க வேண்​டும்.

எல்​பிஜி சிலிண்​டர்​கள் இருப்பு நிலை மற்​றும் பாது​காப்​பாக இணைக்​கப்​பட்​டுள்​ளதை​யும் சரி​பார்க்​க​வும், பள்​ளி​கள் திறந்த முதல் நாளே முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​தின்​கீழ் உணவு வழங்​கு​வதற்​குத் தேவை​யான பாத்​திரங்​கள் தயா​ராக இருப்​பதை உறு​தி​செய்​ய​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், பள்​ளி​கள் திறக்​கும் நாள் அன்றே பள்ளி மாணவர்​களுக்கு பாடநூல்​கள், சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்​சி ஆணை​யர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தி.நகர் பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை இயக்க விரைவில் டெண்டர்: 513 இருசக்கர வாகனங்கள், 222 கார்களை நிறுத்தலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in