

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
2026-27-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 5,900 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 10-ம்தேதி வரை நடைபெறும். மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 14-ம் தேதி ஆன்லைனில் வழங்கப்படும். www.twise.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வியியல் கல்லூரிகளில் ஆக.17 முதல் 21-ம் தேதிக்குள் சேர வேண்டும். திட்டமிட்டபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆக.24-ம் தேதி தொடங்க உள்ளது.