கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டம்: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டம்: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவர்​களின் கல்வி உதவித் தொகைக்​கான பிஎம் யாசஸ்வி திட்​டத்​துக்​கு, விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சீர்​மரபினர் நலத்​துறை இயக்​குநரகம் சார்​பில், மாவட்ட அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: பிஎம் யாசஸ்வி திட்​டத்​தின் கீழ், பட்​டியலிடப்​பட்ட பள்​ளி​களில் 9 மற்​றும் 11-ம் வகுப்​பு​களில் படிக்​கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகை​யாக வழங்​கப்​படு​கிறது.

நடப்​பாண்டு புதுப்​பித்​தல் மற்​றும் புதிய விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்​கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, தகு​தி​யான மாணவர்​கள் https://scholarships.gov.in என்ற இணை​ய​வழி​யில் துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும். பள்ளி அளவில் விண்​ணப்​பங்​களை சரி​பார்க்க வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டம்: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தல்: பெண் உள்பட 5 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in