ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தல்: பெண் உள்பட 5 பேர் கைது

ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தல்: பெண் உள்பட 5 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: போதைப் பொருள் கடத்தி வந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ஆந்​தி​ரா​விலிருந்​து, தமிழகத்​துக்கு போதைப் பொருட்​கள் கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் பேரில், ஆர்​.கே.நகர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் காலை, கொருக்​குப்​பேட்​டை, கண்​ணகி நகர் பகு​தி​யில் கண்காணித்​தனர்.

அப்​போது, அங்கு சந்​தேகத்​திற்​கிட​மாக நின்று கொண்​டிருந்த பெண் உள்பட 5 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

வலி நிவாரண மாத்​திரைகள்: அவர்​கள் முன்​னுக்​குப்பின் முரணாக பதில் அளித்த​தால், கையில் வைத்​திருந்த பைகளை வாங்கிசோதித்​த​போது, போதைப் பொருளாக பயன்​படுத்த வைத்​திருந்த வலி நிவாரணமாத்​திரைகள் மற்​றும் கஞ்சா இருந்​தது தெரிந்​தது.

இதையடுத்​து, அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார், போதைப் பொருள் கடத்தி வந்த கொடுங்​கையூரைச் சேர்ந்த அருள்​ராஜ் (25), அரவிந்தன் (26), தண்​டை​யார் பேட்டையைச்சேர்ந்த சூர்யா (25), கோபால்(32), திரு​வொற்றியூரைச் சேர்ந்த சுவேதா (21) ஆகிய 5 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து 600 வலி நிவாரண மாத்​திரைகள், 4 கிலோ கஞ்சா மற்​றும் 3 செல்​போன்​கள், 2 பைக்குகள் பறி​முதல் செய்​யப்​பட்டன. ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து போதைப் பொருள் கடத்தல்: பெண் உள்பட 5 பேர் கைது
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in