அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின்​படி நாடு முழு​வதும் உள்ள பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் கல்​லூரி​கள் அருகே இருக்​கும் 5 அல்​லது 6 அங்​கன்​வாடி மையங்​களை தத்​தெடுக்க வேண்​டும். அங்​குள்ள குழந்​தைகளுக்கு தரமான கல்​வி, பராமரிப்பு கிடைக்க உதவ வேண்​டும். இந்த சமூகப் பணி​களை மாணவர்​களின் பாடத் திட்​டத்​துடன் இணைக்க வேண்​டும்.

3 முதல் 6 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்​கான ஆரம்​பக்கல்​வியை மேம்​படுத்​தவே இந்த முன்​னெடுப்பு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. அங்​கன்​வாடி மையங்​களுக்கு மாணவர்​கள் சென்று களப்​பணி​களில் ஈடு​படலாம். இது மாணவர்​களுக்கு அனுபவ ரீதி​யான கற்​றல் மற்​றும் சமூகப் பொறுப்​புணர்​வை​யும் உரு​வாக்​கும்.

மேலும் அங்​கன்​வாடி மையங்​களுக்கு தொடர்ச்​சி​யான கல்வி மற்​றும் கள ரீதி​யான வழி​காட்​டு​தலை உயர்​கல்வி நிறு​வனங்​கள் வழங்க வேண்​டும். எனவே, உயர்​கல்வி நிறு​வனங்​கள் சமூக மேம்​பாட்டு நடவடிக்​கை​களின் ஒரு பகு​தி​யாக அங்​கன்​வாடிகளு​டன் இணைந்து செயல்பட வேண்​டும். பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து வித​மான உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில் இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“சுந்தர்.சி-யின் வருகை ஒரு ‘படித்த’ அரசியல்வாதியை நடுங்க வைத்துள்ளது” - குஷ்பு விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in