

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் படிக்க 2,99,588 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.
அந்தவகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 பேர்விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் அடங்குவர். மேலும், அரசு பள்ளி மாணவிகள் 54,638 பேர் அரசு கலை, அறிவியல்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.