சிறைவாசிகளில் 58 பேர் முதுகலை, 96 பேர் இளங்கலை படித்து வருகின்றனர்: தமிழக அரசு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சிறைவாசிகளில் 58 பேர் முதுகலை, 96 பேர் இளங்கலை படிப்புகளைப் படித்து வருவதாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதன்பின், துறையின் அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டம் மற்றும் நீதி நிர்வாகத் துறையின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் கொள்கை விளக்கக் குறிப்பில் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 9,844 சிறைவாசிகள், பல்வேறு பாடப் பிரிவுகளைத் தொடர்ந்து பயின்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் விவரம்:

  • பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் அடிப்படை எழுத்தறிவு கல்வித் திட்டம் - 1,802
  • அடிப்படைக் கல்வி (7-ம் வகுப்பு வரை ஆயத்த படிப்பு) - 3,606
  • எழுத்தறிவு திட்டக் கல்வி (மாநில ஆதார மையம் வழியாக) -3,606
  • கணினி முதுகலை படிப்பு - 04
  • வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பு - 28
  • கலை, அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு - 26
  • கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம், இளங்கலை படிப்பு 96
  • வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பு - 31
  • 8,10,11 மற்றும் 12-ம் வகுப்பு - 889
  • பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு - 314

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in