11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்வு எழுதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1 முதல்9-ம் தேதி வரையான நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் ஆய்வக உதவியாளரை நியமிக்க வேண்டும்.

உடல் இயக்கக் குறைபாடு, பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான சரியான விடையை தேர்வு செய்யும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி தேர்வில் பங்குபெறச் செய்யலாம். மதிப்பெண்களை மார்ச் 11-க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in