Published : 09 Oct 2022 04:20 AM
Last Updated : 09 Oct 2022 04:20 AM

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.

தகுதியான மாணவர்கள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் http://scholarships.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x