

மதுரை பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சி.எஸ்.ஸ்ரீமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, தவில், மிருதங்கம், புல்லாங்குழல், பரதநாட்டியம், நாகசுரம், நாட்டுப் புறக்கலை ஆகிய பட்டயப் படிப்புகளும், மூன்றாண்டு பட்டப் படிப்புக்கான பிஏ குரலிசை, பரதம், ஓராண்டு இலவச ஆசிரியர் பயிற்சி நடத்தப்படுகிறது.
இக்கல்லூரியில் மாதந்தோறும் ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இலவச மடிக்கணிணி வழங்கப்படுகிறது.
மாலைநேர இசைக் கல்லூரி 2 ஆண்டு சான்றிதழ் படிப்புகளான குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இசையில் ஆர்வமுள்ள மாணவர் கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், அலுவலகத் தொலை பேசி எண்- 0452-2370861-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.