Published : 25 Apr 2022 07:14 AM
Last Updated : 25 Apr 2022 07:14 AM

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி

சென்னை: மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி-களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நடைபெறும். இதில் முதல்நிலைத் தேர்வு நடப்பாண்டு முதல் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.

அதன்படி ஜேஇஇ முதல்நிலை முதல்கட்ட தேர்வு ஜூன் 20 முதல்29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்று இரவு 9 மணியுடன் (ஏப்ரல் 25) நிறைவு பெறுகிறது.

தேர்வு ஜூன் மாதம் தள்ளிவைப்பு

எனவே, மாணவர்கள் /jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான தேர்வுக்கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஏப்ரலில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை மாணவர்கள் நலன்கருதி ஜூன் மாதத்துக்கு என்டிஏஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x