Published : 02 Apr 2022 08:44 AM
Last Updated : 02 Apr 2022 08:44 AM

ஜேஇஇ, கேட்-பி நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, ஜேஇஇ முதல்கட்டத் தேர்வு ஏப்.21 முதல் மே 4-ம் தேதி வரையும், 2-ம்கட்ட தேர்வு மே 24 முதல் 29-ம் தேதிவரையும் நடக்க உள்ளது.

முதல்கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் தற்போது ஏப்.5வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பயோ டெக்னாலஜி தொடர்பானகேட்-பி, பிஇடி தேர்வுகள் ஏப்.23-ல்கணினிவழியில் நடக்க உள்ளன.இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளை (ஏப்.3) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் dbt.nta.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x