Published : 28 Mar 2022 12:40 PM
Last Updated : 28 Mar 2022 12:40 PM

அண்ணாமலை பல்கலை.யில் உபரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு 

சென்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த 370 உதவி பேராசிரியர்கள் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து 545 பேராசிரியர்கள் மற்றும் 2,645 அலுவலர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பிற அரசுக் கல்லூரிகளுக்கு பணியிட மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக 370 உபரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை பல்கலைபல் கலைக்கழகத்தில் நிதிநிலை சரியில்லாத சூழலால், ஏற்கெனவே அங்கிருந்த பிற அரசுக் கல்லூரிகளுக்கு பணியிடம் மாற்றப்பட்ட 370 ஆசிரியர்கள் தற்போதையே இடத்திலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் தொடர வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x