Published : 07 May 2024 05:26 AM
Last Updated : 07 May 2024 05:26 AM

பிளஸ் 2 தேர்வு முடிவு: சிறைவாசிகள் 115 பேர் தேர்ச்சி

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92 சதவீதம் ஆகும்.

இதில், மதுரை மத்திய சிறை சிறைவாசிகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். ஆரோக்கிய ஜெ.பிரபாகரன் 600-க்கு 536 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அலெக்ஸ் பாண்டியன் 532 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும் அருண்குமார் 506 மதிப்பெண் பெற்று3-ம் இடத்தையும் வென்றுள்ளனர்.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள விசாரணை, தண்டனை, மகளிர் சிறைவாசிகள் என 3 பிரிவுகளிலும் 36 கைதிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 35 பேர் மட்டும் தேர்வுஎழுதினர். அவர்களில் தண்டனைபிரிவில் தேர்வு எழுதிய 26ஆண் கைதிகளில் 24 பேரும், விசாரணை பிரிவில் 6 ஆண் கைதிகளும், மகளிர் பிரிவில் தேர்வு எழுதிய 3 பெண் கைதிகளில் இருவர் என மொத்தம் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x