Published : 13 Apr 2024 05:41 AM
Last Updated : 13 Apr 2024 05:41 AM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்.21 வரை விடுமுறை

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தேர்வுகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வுகள் தள்ளிவைப்பு: இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங் கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரம்ஜான் பண்டிகைகாரணமாக 4 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதி களுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு நேற்றுடன் முடிவடைய இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் சற்று தள்ளிப்போனது.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. மேலும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆசிரியர்கள் வாரவிடுமுறை, மற்றும் தேர்தல் விடு முறை தவிர்த்து மற்ற நாட்களில் பள்ளிக்கு வரவேண்டும்.

2 மாதம் கோடை விடுமுறை: மாணவர்கள் மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் பள்ளிக்கு தேர்வெழுத வரவேண்டும். அதன்பின் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் 2 மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும் என துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x