Published : 29 Nov 2023 01:35 PM
Last Updated : 29 Nov 2023 01:35 PM

ஆஹா..! - மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் ஆலங்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

ஆர்.தர்ஷனா, என்.தனவர்த்தனா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 33 வகையான போட்டிகளை உள்ளடக்கிய கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வேலூரில் அண்மையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஆர்.தர்ஷனா- செவ்வியல் நடனத்திலும், என்.தனவர்த்தனா- தோல் இசைக் கருவி இசைக்கும் போட்டியிலும் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x