ஹாங்காங்கிலிருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வந்த பட்டதாரி இளைஞர் கைது

முகமது ஆசிக் அப்​துல்லா

முகமது ஆசிக் அப்​துல்லா

Updated on
1 min read

சென்னை: ஹாங்காங்கிலிருந்து சென்​னைக்கு உயர் ரக கஞ்சா கடத்​திய பட்​ட​தாரி இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அவரது கூட்​டாளிகளை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

சென்னை பூக்​கடை பகுதி மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு போலீ​ஸார் நேற்று முன்​தினம் வடக்கு கடற்​கரை, ஜாபர் சாரங் தெரு​வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்​போது அங்கு சந்​தேகப்​படும்​படி நின்​றிருந்த இளைஞரிடம் விசா​ரித்​தனர்.

அவர் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால், அவரது உடைமை​களை சோதித்​த​போது, அதில், உயர் ரககஞ்சா (ஓஜி கஞ்​சா) மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார் விற்​பனைக்​காக கஞ்சா பதுக்கி வைத்​திருந்த மண்​ணடியைச் சேர்ந்த முகமது ஆசிக் அப்​துல்லா (34) என்​பவரை கைது செய்​தனர். விசா​ரணை​யில் முகமது ஆசிக் அப்​துல்லா பி.​காம்.

படித்​து​விட்டு ஹாங்காங்கில் வேலை செய்​துள்​ளதும், தற்​போது சென்​னை​யில் வசித்து வரு​வதும், பழக்​க​மான நண்​பர்​கள் மூலம் கஞ்​சாவை ஹாங்காங்கிலிருந்து வரவழைத்து சென்​னை​யில் விற்​பனை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை சிறை​யில் அடைத்த போலீ​ஸார், அவரது கூட்​டாளி​களை தேடி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>முகமது ஆசிக் அப்​துல்லா</p></div>
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் இனங்களை புதிதாக வளர்க்க தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in