கரூரில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த இளைஞர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது

பாண்டீஸ்வரன்

பாண்டீஸ்வரன்

Updated on
1 min read

சென்னை: கரூரில் மூதாட்டியை கொன்​று, நகைகளை திருடி ரயி​லில் தப்​பிய இளைஞர் சென்னை சென்ட்​ரலில் ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

கரூர் மாவட்​டம், வெள்​ளியணை காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட சாலைப்​பட்​டி​யில் தனி​யாக வசித்து வந்​தவர் தாயாரம்​மாள் (79). கடந்த 26-ம் தேதி, திண்​டுக்​கல் மாவட்​டம், குஜிலி​யம்​பாறை லந்​தக்​கோட்​டை​யில் வசிக்​கும் தனது மகள் மனோரஞ்​சிதத்​துடன் செல்​போனில் பேசி​விட்​டு, திண்​ணை​யில் கட்​டிலில் படுத்து தூங்​கி​னார்.

மறு​நாள் காலை, மூதாட்​டி​யின் உறவினர் அருணாச்​சலம் அந்த வழி​யாக சென்​றார். அதி​காலை 4 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்​யும் தாயாரம்​மாள் காலை 6.45 மணி ஆகி​யும் எழாத​தால் சந்​தேகம் அடைந்​தார்.

இதையடுத்​து, வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்​த​போது, கை, கால்​கள், வாய் ஆகியவை துணி​யால் கட்​டப்​பட்டு இறந்த நிலை​யில் தாயாரம்​மாள் கிடந்​தார்.

இதுகுறித்​து, தாயாரம்​மாளின் மகள் மனோரஞ்​சிதத்​துக்கு அருணாச்​சலம் தகவல் தெரி​வித்​தார். மனோரஞ்​சிதம் சாலப்​பட்​டிக்கு விரைந்து வந்​து, தாயாரின் சடலத்தை பார்த்து அதிர்ச்​சி​யடைந்​தார்.

மேலும், அவர் அணிந்​திருந்த அரை சவரன் தோடு மற்​றும் கால் சவரன் மூக்​குத்தி ஆகிய​வற்றை காண​வில்​லை. இந்த கொலை தொடர்​பாக மனோரஞ்​சிதம், வெள்​ளி​யானை காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார்.

இதன்​பேரில், போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்​த​தில் மதுரை மாவட்​டம், திருப்​பரங்​குன்​றத்தை சேர்ந்த பாண்​டீஸ்​வரன் (19) என்​பவர் தான் கொலை செய்து விட்டு தப்​பியது தெரிந்​தது.

அவரது செல்​போன் எண்ணை ஆய்வு செய்த போது, கேரள மாநிலம் ஆலப்​புழா​வில் இருந்​து, ஜார்​கண்ட் மாநிலம் தன்​பாத் செல்​லும் விரைவு ரயி​லில் பயணம் செய்​வது தெரிய​ வந்​தது.

இதையடுத்​து, கரூர் மாவட்ட போலீஸார், சென்னை சென்ட்​ரல் ரயில்வே போலீ​ஸாருக்கு தகவல் அளித்​தனர். அதன்​பேரில், தன்​பாத் விரைவு ரயில் நேற்​று​முன்​தினம் இரவு 10 மணிக்கு சென்ட்​ரலுக்கு வந்​தவுடன், உரிய அடை​யாளம் மற்​றும் போட்​டோவை வைத்​து, பாண்​டீஸ்​வரனை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

தொடர்ந்​து, வெள்​ளியணை போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். சென்​னைக்கு விரைந்த வெள்​ளியணை போலீ​ஸார்​, கொலை​யாளி பாண்டீஸ்வரனை கைது செய்து விசாரணைக்காக கரூர் அழைத்துச் சென்றனர்.

<div class="paragraphs"><p>பாண்டீஸ்வரன்</p></div>
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in